sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசியல் பரபரப்புக்கு இடையே டென்னிஸ் விளையாடிய முதல்வர்

/

அரசியல் பரபரப்புக்கு இடையே டென்னிஸ் விளையாடிய முதல்வர்

அரசியல் பரபரப்புக்கு இடையே டென்னிஸ் விளையாடிய முதல்வர்

அரசியல் பரபரப்புக்கு இடையே டென்னிஸ் விளையாடிய முதல்வர்


ADDED : ஜூலை 10, 2025 04:20 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரசியல் பரபரப்புக்கு இடையே முதல்வர் ரங்கசாமி வழக்கம் போல் டென்னிஸ் விளையாடினார்.

கவர்னருடனான மோதலை தொடர்ந்து, முதல்வரின் ராஜினாமா அறிவிப்பு புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரை சமாதானப்படுத்த பா.ஜ., - அ.தி.மு.க., என்.ஆர்., காங்., முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி முதல்வருக்கு நெருக்கமானவர்கள் உள்பட சட்டசபை துவங்கி முதல்வர் வீடு வரை சென்று முதல்வரை சந்தித்து பேசிவிட்டு சென்றனர். இதனால் புதுச்சேரியில் துவங்கி டில்லி பா.ஜ., தலைமை வரை அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்நிலையில், எவ்வித டென்ஷனும் இல்லாமல் முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை 6:15 மணியளவில் துவங்கி வழக்கம் போல் தனது வீட்டில் உள்ள கிரவுண்டில் 45 நிமிடம் டென்னிஸ் விளையாடினார். 7:15 மணியளவில் அங்கு வந்த டில்லி மேலிடப் பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் சந்தித்து பேசினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் திருமுருகன் மாங்கனி திருவிழாவில் முதல்வர் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து சென்றார்.

முன்னதாக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகனும், முதல்வரை சந்தித்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.

அதனையடுத்து திருமணம் உள்ளிட்ட வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் புறப்பட்டு சென்றார்.

போலீஸ் பாதுகாப்பு


முதல்வர் ரங்கசாமி வீட்டில் வழக்கமாக போலீஸ் கெடுபிடி இருக்காது. ஆனால், நேற்று முதல்வரை சமாதானப்படுத்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அடுத்தடுத்து அவரது வீட்டிற்கு வருகை தந்தனர். இதனால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும், முக்கியஸ்தர்கள் மட்டும் முதல்வரை சந்திக்கும் வகையில், வீட்டு மாடிப்படிக்கட்டில் ஐ.ஆர்.பி.என்., போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us