sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காங்கிரஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி: மாஜி முதல்வர் நாராயணசாமி ஆருடம்

/

காங்கிரஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி: மாஜி முதல்வர் நாராயணசாமி ஆருடம்

காங்கிரஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி: மாஜி முதல்வர் நாராயணசாமி ஆருடம்

காங்கிரஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி: மாஜி முதல்வர் நாராயணசாமி ஆருடம்


ADDED : பிப் 17, 2025 05:57 AM

Google News

ADDED : பிப் 17, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்; புதுச்சேரி காங்., ஊசுடு தொகுதி சார்பில், ஆளும் என்.ஆர். காங்., மற்றும் பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்து பாதயாத்திரை சென்றனர்.

சேதராப்பட்டில் துவங்கிய பாதயாத்திரை கரசூர், துத்திப்பட்டு, தொண்டமாநத்தம், பத்துக்கண்ணு வழியாக கூடப்பாக்கம்சென்றடைந்தனர்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஊசுடு தொகுதி தலைவர்கள் ராமு, சங்கர், நிர்வாகிகள் பாபு, செந்தில், லோகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் சுப்ரமணியன், ஆனந்தராமன், தேவதாஸ், இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக பாதயாத்திரையை துவக்கி வைத்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி வேட்பாளரை வீழ்த்தி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். ஆளும் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. விலைவாசி உயர்வு, 10 ஆயிரம் அரசு பணி காலியிடங்களை முறையாக நிரப்பாதது.

நகரம் மற்றும் கிராம பகுதியில் வீதிக்கு வீதி ரெஸ்ட்ரோ பார்கள் திறந்துள்ளதால், மக்கள் நிம்மதியாக வாழ முடியாமல் சிரமப்படுகின்றனர்.விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.நமது மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு கொடுமை படுத்துகின்றனர்.பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்களை எல்லாம் பொது மக்களுக்கு எடுத்துக் கூறி, தொகுதி தோறும் பாதயாத்திரை, பொதுக்கூட்டம் நடத்தி வருகிறோம்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வரும் சட்டசபை தேர்தலில் காங்., தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம். சிறுமி பாலியல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us