sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குழந்தை தத்து கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ. 1 லட்சம் மோசடி

/

குழந்தை தத்து கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ. 1 லட்சம் மோசடி

குழந்தை தத்து கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ. 1 லட்சம் மோசடி

குழந்தை தத்து கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ. 1 லட்சம் மோசடி


ADDED : செப் 21, 2024 12:31 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குழந்தை தத்து கொடுப்பதாக கூறி, புதுச்சேரி தம்பதியிடம் 1 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் சினோத். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியும் குழந்தை இல்லை. பேஸ்புக்கில், குழந்தை தத்தெடுக்க விருப்பமா? அன்பு இல்லம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளுங்கள் என்ற விளம்பரம் வந்தது.

அதில் இருந்த தொலைபேசி எண்ணை சினோத் தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசியவர், அரசு வழிகாட்டுதல்படி குழந்தை தத்து தருவதாக, 10 குழந்தைகளின் படங்களை அனுப்பி, அதில் எந்த குழந்தை வேண்டும் எனக் கேட்டார். மேலும், அன்பு இல்லம் அறக்கட்டளையில் குழந்தைகளை தத்து கொடுக்கும் போட்டோக்களை அனுப்பினார்.

அதனை நம்பிய சினோத், 4 வயது குழந்தையை தத்து எடுக்க விரும்பம் தெரிவித்தார். அதற்கு அரசு மற்றும் அறக்கட்டளைக்கு சில கட்டணங்கள் செலுத்த வேண்டும் எனக்கூறி பல்வேறு கட்டமாக வங்கி கணக்குகள் மூலம் 1.04 லட்சம் ரூபாய் பெற்ற மர்ம கும்பல், குழந்தையை தத்து கொடுக்காமல் காலம் கடத்தியது.

சந்தேகமடைந்து சினோத், மர்ம நபர்களை விசாரிக்க முயன்றபோது அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். அவர், அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், 'ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி பொருட்களை வாங்க பணம் செலுத்த வேண்டாம்' என்றார்.






      Dinamalar
      Follow us