sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம்

/

குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம்

குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம்

குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம்


ADDED : ஜன 16, 2025 04:21 AM

Google News

ADDED : ஜன 16, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு,: கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் துவங்கும் வீராணம் ஏரி 14 கி.மீ., நீளம், 5 கி.மீ. அகலம் பரப்பில் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் முடிவடைகிறது. அதிக நீர்பிடிப்பு ஆதாரமான வீராணம் ஏரி 47.50 அடி (1465 மில்லியன் கன அடி) தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

சம்பா பருவ காலங்களில் காட்டுமன்னார்கோவில், குமாரட்சி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை,புவனகிரி, கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இந்த ஏரி மூலம் பாசனம் பெறுகின்றன.

கடந்த டிசம்பர் 25ம் தேதி முதல் கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏரியின் அனைத்து மதகுகளையும் அடைத்து முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாத நிலையில் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து, நேற்றைய நிலவரப்படி 45.65 அடி (1014 மில்லின் கன அடி) தண்ணீர் உள்ளது.

வீராணம் ஏரியிலிருந்து பூதங்குடி நீரேற்று நிலையத்தில் மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் ஏரியில் படிப்படியாக தண்ணீர் குறையத் துவங்கியுள்ளது.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே உள்ளிட்ட நான்கு மாதங்கள் கோடை காலம் உள்ள நிலையில் ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் கோடையில் சென்னைக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்தை சமாளிக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us