sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குபேர் பஜார் கடை ஒதுக்குவதில் சிக்கல் ஆன்லைன் ஏலம் விட நகராட்சி முடிவு

/

குபேர் பஜார் கடை ஒதுக்குவதில் சிக்கல் ஆன்லைன் ஏலம் விட நகராட்சி முடிவு

குபேர் பஜார் கடை ஒதுக்குவதில் சிக்கல் ஆன்லைன் ஏலம் விட நகராட்சி முடிவு

குபேர் பஜார் கடை ஒதுக்குவதில் சிக்கல் ஆன்லைன் ஏலம் விட நகராட்சி முடிவு


ADDED : செப் 29, 2024 05:01 AM

Google News

ADDED : செப் 29, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணா திடல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 9.60 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியமாக கட்டும் பணி கடந்த 2021ம் ஆண்டு துவங்கியது.

மைதானத்தை சுற்றி அண்ணா சாலை, குபேர் பஜாரில் 80 கடைகள், லெப்போர்த் வீதியில் 20, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் 79 கடைகள் இடித்து அகற்றி புதிய கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதில், லெப்போர்த் வீதி கடைகளும், சின்ன சுப்ராயப்பிள்ளை கடைகள் ஏற்கனவே அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள அண்ணா சாலை குபேர் பஜாரில் உள்ள 80 கடைகளுக்கு மட்டும் கடைகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

புதுச்சேரி நகராட்சியோ நீங்களே கடைகளை தேர்வு செய்து கொண்டு வந்தால் ஏற்று கொள்கிறோம் மறுத்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து கொடுக்கிறோம் என, கூறிவிட்டது.

ஆனால், இரு குழுவாக உள்ள வியாபாரிகள் ஆளாக்கு ஒரு எம்.எல்.ஏ., ஆதரவுடன் தங்களுக்கு விரும்பிய கடை தான் வேண்டும் என அடம்பிடித்து வருகின்றனர்.

இதனால் அண்ணா சாலை குபேர் பஜாரில் உள்ள கடைகளை மட்டும் ஆன்லைனில் புதிய வியாபாரிகளுக்கு இ-ஆக் ஷன் மூலம் ஏலம் விடலாம் என நகராட்சி ஆலோசித்து வருகிறது.

ஏலம் விட்டால் புதுச்சேரி நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதால், தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us