
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராசு, 66. இவர் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை.
உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காணாமல் போன கோவிந்தராசு பற்றி தகவல் தெரிந்தால் 2228067 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.