/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்றில் மிதந்த சடலம் போலீசார் விசாரணை
/
ஆற்றில் மிதந்த சடலம் போலீசார் விசாரணை
ADDED : அக் 09, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் நேற்று காலை சடலம் ஒன்று மிதப்பதாக பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து, பாகூர் தீயணைப்பு நிலையத்திற்கு தவகல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு நிலை ஏட்டு செல்வம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர்.
பாகூர் போலீசார், பிரேத பரிசோதனைக்கு சடலத்தை கதிர்காமம் அரசு மருத்துவமனை அனுப்பினர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.