நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
ADDED : நவ 06, 2025 12:33 PM

சென்னை: தமிழகத்தில் நாளை (நவ., 07) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மியான்மர் - வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. தமிழக உள்பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும் நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (நவ., 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* சிவகங்கை
* மதுரை
* திண்டுக்கல்
* திருச்சி
* பெரம்பலூர்
* அரியலூர்
* சேலம்
* கள்ளக்குறிச்சி
* தர்மபுரி
* திருப்பத்தூர்
* திருவண்ணாமலை
* கிருஷ்ணகிரி
நாளை (நவ., 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* விருதுநகர்
* சிவகங்கை
* ராமநாதபுரம்
நாளை மறுநாள் (நவ., 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாமகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

