/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக்கில் சென்றவர் மயங்கி விழுந்து சாவு
/
பைக்கில் சென்றவர் மயங்கி விழுந்து சாவு
ADDED : நவ 16, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி பஜனை மடத்து வீதியை சேர்ந்தவர் நல்லத்தம்பி, 58; பாசிக் நிறுவனத்தில், சேல்ஸ் மேனாக பணி செய்து வந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், நேற்று மருத்துவமனைக்கு சென்று விட்டு வில்லியனுார் சாலை, போன் கரே வீதி வழியாக வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மயங்கி கீழே விழந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.