ADDED : செப் 03, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தந்தை இறந்த சோகத்தில் மகன் மயங்கி விழுந்து இறந்தார்.
பூமியான்பேட், புது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 41; தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷின் தந்தை க டந்த 30ம் தேதி இறந்தார்.
அதிலிருந்து மனமுடை ந்த நிலையில் இருந்த சதீஷ், நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கதிர்காமம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, இறந்து விட் டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.