ADDED : நவ 15, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில், ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முருங்கப்பாக்கம் சாலையில், வாலிபர், பொது இடத்தில் நின்று கொண்டு, பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக, முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
அதையடுத்து, நேற்றுமுன்தினம் போலீசார் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
முதலியார்பேட்டை வள்ளலார் தெருவை சேர்ந்த தங்கவேல்,28; என தெரியவந்தது. அவர் மீது, வழக்கு பதிந்து, போலீசார் கைது செய்தனர்.