ADDED : பிப் 17, 2024 04:46 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம : சாலையில் நின்று பெண்களை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பத்தில் முக்கிய இடங்களில் வாலிபர்கள் நின்று கொண்டு சாலையில் நடந்து செல்லும் பெண்களை கிண்டல் செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று அரியாங்குப்பம் போலீசார் ஆர்.கே., நகர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் வீராம்பட்டினத்தை சேர்ந்த புவனேஷ், 21, என தெரியவந்தது. போலீசார் புவனேஷ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
