ADDED : பிப் 26, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுாரில் கூலி தொழிலாளி, வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார்.
திருக்கனுார் பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் சர்க்கரை, 51; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர் நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி கிடந்தார்.
குடும்பத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தார். புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

