நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: வீட்டில் இருந்து வெளியில் சென்ற சகோதரியை காணவில்லை என, சகோதரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தவளக்குப்பம், லலிதா நகரை சேர்ந்தவர் தங்கராஜ் மகள் பரமேஸ்வரி (எ) லட்சுமி, 20. இவர், அழகு காலை பட்டப்படிப்பு படித்து விட்டு, புதுச்சேரியில் அழகு நிலையத்தில் பணி செய்து வந்தார். கடந்த 19ம் தேதி வெளியே சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.
உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது சகோதரன் செல்வம் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

