தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 10 ஆடுகள் திருட்டு

10 ஆடுகள் திருட்டு

10 ஆடுகள் திருட்டு


ADDED : ஜன 25, 2025 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வானுார் : கிளியனுார் அருகே இரு இடங்களில் 10 ஆடுகளை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கிளியனுார் அடுத்த தென்கோடிப்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் மனைவி முத்தம்மாள்,45; இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வளர்மதி. இருவரும் ஆடு வளர்த்து வருகின்றனர். கடந்த 22ம் தேதி இரவு இருவரும் தங்கள் ஆடுகளை அருகில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தனர். விடியற்காலை எழுந்து வந்து பார்த்தபோது முத்தம்மாளுக்கு சொந்தமான 6 ஆடுகளும், வளர்மதிக்கு சொந்தமான 4 ஆடுகளும் திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us