/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்
/
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED : நவ 03, 2025 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:  கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.
புதுச்சேரி, ரயில் நிலையம் அருகில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் 7ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நி ர்வாகிகள் செய்துள்ளனர்.

