/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காமீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு
/
திருக்காமீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு
ADDED : நவ 20, 2024 05:09 AM

வில்லியனுார் : திருக்காமீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். இம்முறை கார்த்திகை தீப திருவிழா வருவதை முன்னிட்டு புதுச்சேரி இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் முன்னரே கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படும் பணி நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.
திருக்காமீஸ்வரர் கோவில் சிறப்பு அதிகாரி காமேஸ்வரன், கோவில் ஊழியர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரி முன்னிலையில் வில்லியனுார் சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் 20க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.