ADDED : ஜூன் 21, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் கூறும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் மோகன்தாசு வரவேற்றார். புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி பங்கேற்று, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, திருக்குறள் கூறும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பங்கேற்று திருக்குறள் வாசித்த அனைத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
இதில், தமிழ் சங்க துணைத் தலைவர் ஆதிகேசவன், பொருளாளர் அருள் செல்வம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, துணைச் செயலர் தினகரன், பாலசுப்ரமணியன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், ராஜா, சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன், பாரதி, பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.