ADDED : பிப் 06, 2026 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி - கடலுார் சாலை, அந்தோணியர் பள்ளி அருகில் கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்கப்படுவதாக நேற்று முன்தினம் உருளையான்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது .
போலீசார் விரைந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், வானரப்பேட்டை முருகன், 38; கடலுார், திருப்பாப்புலியூர் ஞானசேகரன், 42; ரோடியார்பேட்டை ராமு, 47, ஆகியோர் என்பதும், கூல் லீப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்றதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 71 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.

