sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுவன் பைக் ஓட்டி விபத்து போலீஸ் உட்பட 3 பேர் காயம்

/

சிறுவன் பைக் ஓட்டி விபத்து போலீஸ் உட்பட 3 பேர் காயம்

சிறுவன் பைக் ஓட்டி விபத்து போலீஸ் உட்பட 3 பேர் காயம்

சிறுவன் பைக் ஓட்டி விபத்து போலீஸ் உட்பட 3 பேர் காயம்


ADDED : மே 09, 2025 12:08 AM

Google News

ADDED : மே 09, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் சிறுவன் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், போலீஸ்காரர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

காரைக்கால், நெடுங்காடு, அன்னவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 43; போலீஸ்காரர். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு இரவு தனது பைக்கில் அன்னவாசல் அருகில் சென்றபோது எதிரே 17 வயது சிறுவன் தனது தங்கையுடன் வந்த பைக் போலீஸ்காரர் செந்தில்குமார் மீது மோதியது.

அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

செந்தில்குமார் மற்றும் 17 வயது சிறுவன், உடன் வந்த சிறுமி ஆகிய மூவரும் காயமடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, நெடுங்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக செந்தில்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். விபத்து தொடர்பாக சிறுவனுக்கு பைக் கொடுத்த அவரது தந்தை செல்வம் மீது நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us