sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு

/

மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு

மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு

மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு


ADDED : பிப் 21, 2025 04:52 AM

Google News

ADDED : பிப் 21, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சூப்பர் மார்க்கெட்டில் மாமூல் கேட்டு, மிரட்டிய ரவுடிகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, காந்தி நகரைச் சேர்ந்தவர் மகா ராஜா, 50. இவர் கவுண்டன்பாளையம், வழுதாவூர் சாலையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு கடைக்கு வந்த மூன்று பேர், அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி வெளியேறும்படி மிரட்டினர்.

பின், அங்கிருந்த கடையின் உரிமையாளர் மகாராஜாவிடம் சென்று நாங்கள் இப்பகுதியின் ரவுடிகள், இங்கு கடை நடத்த வேண்டும் என்றால், எங்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் மாமூல் தர வேண்டும். இல்லையெனில், கொலை செய்து விடுவோம் என கத்தியை காட்டி மிரட்டினர்.

மகாராஜா புகாரின் பேரில், கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

அதில், கடையில் மாமூல் கேட்டு மிரட்டியது ரவுடிகளான குண்டுபாளையம் மணிகண்டன், 24; திலாஸ்பேட்டை பிரசாந்த், 23, மற்றும் கார்த்திக்ராஜ், 25; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரை யும் கைது செய்த போலீசார் அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us