ADDED : ஜன 31, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இன்று (31ம் தேதி) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அரசு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
போகி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு அலுவலங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, கடந்த 14ம் தேதி, விடுமுறை அளிக்கப்பட்டது.
அதனை ஈடுசெய்யும் வகையில், இன்று (31ம் தேதி, சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
