ADDED : ஜூலை 13, 2026 02:39 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்:நயினார்மண்டபம் முத்துமாரியம்மன் கோவிலில் 43ம் ஆண்டு செடல் திருவிழாவையொட்டி, இன்று பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.
கோவிலில் செடல் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. தொடர்ந்து இன்று, (13ம் தேதி) காலை 9:00 மணியளவில் பக்தர்கள் 108 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பாலபிேஷகம் செய்கின்றனர். நாளை (14ம் தேதி) இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.
