ADDED : மார் 02, 2026 03:57 AM

புதுச்சேரி: புதுச்சேரி பழயை துறைமுகத்தில் நடந்து வந்த சுற்றுலா பொருட்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை, தொழில் மற்றும் வணிகத் துறை, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், பழைய துறைமுக வளாகத்தில் புதுச்சேரி சுற்றுலா பொருட்காட்சி-2026ஐ கடந்த 19 ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடந்தது.
கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டு, அங்கு கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட அரசு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த விவரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்கள் 140 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு இசை கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

