sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 23, 2025 08:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2025 08:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் திருத்தத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி 44 தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய்து அறிவித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சட்ட திருத்தம் கொண்டு வந்த நாளை நாடு முழுதும் கருப்பு தினமாக அறிவித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சுதேசி மில் அருகே கரும்பு கொடி ஏந்தியும், பேட்ஜ் அணிந்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம், சி.ஐ.டி.யு. செயலாளர் சீனிவாசன், ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் ஞானசேகரன், எல்.பி.எப் அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தொழிற்சங்கங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கருப்பு கொடி ஏந்தியும், பேட்ஜ் அணிந்தும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்ட திருத்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us