ADDED : ஜூலை 20, 2025 01:42 AM

புதுச்சேரி : கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பில், பாரம்பரிய விதைநெல் கண்காட்சி மற்றும் வீரியமிக்க நெல் விதைகள் வழங்கும் விழா தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.
தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். சமூக இயக்கத்தின் தலைவர் ராஜா வரவேற்றார். காந்தி மக்கள் இயக்க நிறுவனர் ஞானமூர்த்தி, கலாம் சமூக இலக்கியம் மற்றும் இயற்கை பாதுகாப்பு நிறுவனர் இளங்கோவன், முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்க நிறுவனர் மோகன், அறிவுமணி, ஏகாம்பரம் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி, ஜாலி ஹோம் நிறுவனர் புருனோ சாவியோ, பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் இளமதி ஜானகிராமன், முன்னாள் தலைமை ஆசிரியை வாசுகி ராமமூர்த்தி ஆகியோர் இயற்கை விவசாயிகளுக்கு 60 வகையான வீரியமிக்க நெல் விதைகளை இலவசமாக வழங்கினர்.
இதில், கலைவாணி கணேசன், ஹேமலதா அசோக்குமார், உதவி பேராசிரியர்கள் ரேகா, பிரேம்குமார், பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

