sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்

 புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்

 புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்


ADDED : மார் 29, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 07:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலையில் (31ம் தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.பி., பக்தவச்சலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி - கடலுார் சாலையில் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நாளை செடல் உற்சவம் நடக்கிறது.

இவ்விழாவில், பக்தர்கள் அலகு குத்தி தேர் மற்றும் வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனால், புதுச்சேரி - கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நாளை 31ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, புதுச்சேரியில் இருந்து கடலுார் செல்லும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கன்னியக்கோவில், முள்ளோடை மார்க்கமாக கடலுார் செல்ல வேண்டும்.

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் முள்ளோடை ,- கன்னியகோவில், - விழுப்புரம் - -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று அபிஷேகப்பாக்கம், - தவளக்குப்பம் வழியாக புதுச்சேரி செல்ல வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us