/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த பயிற்சி
/
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த பயிற்சி
ADDED : ஜன 03, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் உழவர் உதவியகம் ஆத்மா திட்டம் சார்பில், வயல்வெளியில் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தும் செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் கங்காதுரை முன்னிலை வகித்தார்.
மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை எவ்வாறு கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.

