ADDED : அக் 04, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 31. இவர், நேற்று முன்தினம் மாலை மது குடித்து விட்டு, சூரமங்கலம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த மடுகரை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை, கைது செய்தனர். இதேபோல், மது போதையில், மொளப்பாக்கம் சாலையில் நின்று கொண்டு ஆபாசமாக பேசிய விழுப்புரத்தை சேர்ந்த ஜீவராஜன், 24, என்பவரை போலீசார் கைது செய்தனர்.