ADDED : ஏப் 21, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தனியார் மாலில் எலக்ட்ரீஷியன் வேலை செய்த இருவர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 28, கார்த்திகேயன், 42, இருவரும் கடந்த 18ம் தேதி, கடலுார் சாலையில் உள்ள மாலில் எலக்ட்ரீஷியன் வேலை செய்து கொண்டிருந்தனர்.
திடீரென அவர்கள் மீது மின்சார் பாய்ந்து துாக்கியெறியப்பட்டனர்.
அதில் காயமடைந்த இருவரையும், சக ஊழியர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற இருவரும், மேல் சிகிச்சைக்காக, கடலுார் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

