/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொலை முயற்சி வழக்கு மேலும் இருவர் கைது
/
கொலை முயற்சி வழக்கு மேலும் இருவர் கைது
ADDED : ஜன 14, 2025 06:15 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் முன்விரோதத்தில் வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மேரி உழவர்கரை பகுதியை சேர்ந்தவர்கள் ரூபின், 22; சஞ்சய், 20; இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், சஞ்சய் தனது நண்பர்களான அஸ்வின், பாலா, காமராஜர் நகரை சேர்ந்த தனுஷ் 20, பிரசான்னா, 20; உள்பட 8 பேருடன் வந்து, ரூபினை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் ஏட்டு, மனோஜை தாக்கியவர்களை விரட்டியடித்தார்.
இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய், அஸ்வின், பாலா, தனுஷ், பிரசான்னா ஆகிய 5 பேரை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவான சண்முகாபுரம் சந்தோஷ் 19, காமராஜ் நகர் ஆனந்த், 22,ஆகிய மேலும் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.