sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கைதிகள் போராட்டம் எதிரொலி 2 பேர் ஏனாம் சிறைக்கு மாற்றம்

/

கைதிகள் போராட்டம் எதிரொலி 2 பேர் ஏனாம் சிறைக்கு மாற்றம்

கைதிகள் போராட்டம் எதிரொலி 2 பேர் ஏனாம் சிறைக்கு மாற்றம்

கைதிகள் போராட்டம் எதிரொலி 2 பேர் ஏனாம் சிறைக்கு மாற்றம்


ADDED : நவ 22, 2024 05:33 AM

Google News

ADDED : நவ 22, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் போராட்டம் காரணமாக ஆயுள் கைதிகள் இருவர் ஏனாம் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

புதுச்சேரி,காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பரோல்விடுமுறையில் சென்ற தண்டனை கைதி கருணா, திடீரென தலைமறைவானார்.

இதுகுறித்து சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார், கருணாவை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, பரோல் கொடுக்க சிறை நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

இதனைக் கண்டித்து, தண்டனை கைதிகள் சிலர் தாங்கள் செய்து வந்த சமையல் பணிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் சிறையில் உள்ள பிரபல ரவுடி மணிகண்டன் தலைமையில் நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கைதிகளை போராட்டம் செய்ய துாண்டியதாக ஆயுள் தண்டனை கைதிகள் ரவுடி மணிகண்டன், பெருமாள் ராஜா ஆகியோரை நேற்று சிறை நிர்வாகம் அதிரடியாக ஏனாம் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து இரு கைதிகளும் ஏனாம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.






      Dinamalar
      Follow us