/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருவருக்கு கத்தி வெட்டு 4 பேருக்கு போலீஸ் வலை
/
இருவருக்கு கத்தி வெட்டு 4 பேருக்கு போலீஸ் வலை
ADDED : நவ 25, 2024 05:08 AM

புதுச்சேரி : முன்விரோதத்தில் இருவரை கத்தியால் வெட்டிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பாவாணர் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 47; தமிழ்மணி, 34; ஆகியோருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், சக்திவேல் இவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில், கோபாலகிருஷ்ணன், தமிழ்மணி ஆகிய இருவரும், அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது ராஜேஷ், சக்திவேல் உள்ளிட்ட 4 பேர், 2 பைக்கில் வந்து, கோபாலகிஷ்ணன்,தமிழ்மணி இருவரையும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் இருவரும் பலத்த காயத்துடன் கதிர்காமம் அரசு மருத்துவம கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜேஷ், சக்திவேல் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.