/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடையாளம் தெரியாத நபர் பஸ் மோதி பலி
/
அடையாளம் தெரியாத நபர் பஸ் மோதி பலி
ADDED : ஏப் 29, 2025 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
பழைய பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதி அடையாளம் தெரியாத நபர் இறந்தார்.
புதுச்சேரி, உழவர்சந்தை, பழைய பஸ் நிலையம் அருகே, சுப்பையா சாலையை கடக்க முயன்ற, 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் மீது தனியார் பஸ் மோதியது. படுகாயமடைந்த அவர், அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 0413-2336087 எண்ணில் தொடர்பு கொள்ள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.