sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மேம்பாலம் அமைக்கும் பணிக்கு 13ம் தேதி அடிக்கல் நாட்டு விழா மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பங்கேற்கிறார்

/

மேம்பாலம் அமைக்கும் பணிக்கு 13ம் தேதி அடிக்கல் நாட்டு விழா மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பங்கேற்கிறார்

மேம்பாலம் அமைக்கும் பணிக்கு 13ம் தேதி அடிக்கல் நாட்டு விழா மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பங்கேற்கிறார்

மேம்பாலம் அமைக்கும் பணிக்கு 13ம் தேதி அடிக்கல் நாட்டு விழா மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பங்கேற்கிறார்


ADDED : அக் 02, 2025 01:51 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிக்கான முன் ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் புதுச்சேரி இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை மேம்பாலம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கும் நுாறு சதவீத நிதியுதவிக்கும் அனுப்பப்பட்டது.

அதையடுத்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை 3.8 கி.மீ., தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு நுாறு சதவீத நிதியுதவியாக ரூ.436.18 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 13ம் தேதி நடக்கிறது. விழாவில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்க உள்ளார்.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சட்டசபையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.

அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீரேந்திர சம்பால், திட்ட அதிகாரி வரதராஜன், புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து விழா நடைபெறும் இடமான தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடத்தை பார்வையிட்டனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பன்னீர் மற்றும் துறை சார்ந்த அதி காரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us