ADDED : பிப் 06, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனூர் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் புதிய பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குணச்செல்வி தலைமை தாங்கினார். ஆசிரியர் சங்கர் தேவி வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை பெண் கல்வி துணை இயக்குனர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பள்ளியின் புதிய பெயர் பலகை திறந்து வைத்தார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முருகையன், வேலாயுதம், ரவிசங்கர், மகாராணி, அருணா, கனகா, ஜெபின், விஜயலட்சுமி, பிரேமா ஆகியோ செய்திருந்தனர். ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

