/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு தானியங்கி கல்வி கணக்கு பள்ளிகளில் முகாம் நடத்த வலியுறுத்தல்
/
மாணவர்களுக்கு தானியங்கி கல்வி கணக்கு பள்ளிகளில் முகாம் நடத்த வலியுறுத்தல்
மாணவர்களுக்கு தானியங்கி கல்வி கணக்கு பள்ளிகளில் முகாம் நடத்த வலியுறுத்தல்
மாணவர்களுக்கு தானியங்கி கல்வி கணக்கு பள்ளிகளில் முகாம் நடத்த வலியுறுத்தல்
ADDED : நவ 13, 2024 05:59 AM
புதுச்சேரி : எதிர்க்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய கல்வி அமைச்சகம் அறிவுரைபடி, கல்வித்துறை செயலர் உத்தரவின்படி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளும் தங்கள் மாணவர்களுக்கு 'தானியங்கி நிரந்தர கல்விக் கணக்கு பதிவு ஐடி' உருவாக்க தொடங்கி உள்ளன.
மாணவர் தரவுதள மேலாண்மை அமைப்பு மற்றும் தொகுதி ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு மூலம் உருவாக்கப்படும் இந்த ஐடிகள் மாணவர் களின் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் பள்ளிகளின் பதிவுகளில் பெறப்படுகிறது. இந்த தரவுகள் ஆதார் அட்டையோடு ஒத்துப்போனால் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அதில் மாற்றம் இருந்தால், அதற்குரிய சான்றிதழ் பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் உள்ளாட்சித் துறை அதிகாரியும் வழங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு அதிகாரிகள் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுத்துக் கொடுத்தாலும், ஆதார் திருத்தம் மற்றும் பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விடுமுறை எடுத்து அழைத்துச் சென்றாலும் ஒரே நாளில் ஐடியை உருவாக்க முடியாமல் அலைகழிக்கப்படுகின்றனர்.
பொது சேவை மையங்களில் தகுந்த ஆதாரம் இல்லாத பட்சத்தில் அந்த ஐடி ஏற்கப்படாமல் திருப்பி அனுப்புவதால், மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் சிரமம் அடைகின்றனர்.
இதனை தவிர்க்க, மாணவர்கள் 'தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவு ஐடியை' உருவாக்க அரசு ஒருங்கிணைந்த அதிகாரிகள் குழு அமைத்து, அந்த குழுவுடன் பொதுசேவை மையங்கள் இணைந்து அந்தந்த பள்ளிகளில் முகாம் நடத்தி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.