sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாலையில் வாகனங்களில் வியாபாரம் உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

/

சாலையில் வாகனங்களில் வியாபாரம் உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சாலையில் வாகனங்களில் வியாபாரம் உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சாலையில் வாகனங்களில் வியாபாரம் உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை


ADDED : ஜூலை 26, 2025 04:51 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சாலையோரம் வாகனங்களில் வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் டாட்டா ஏஸ் வாகனங்கள், பங்க் போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தி வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இது தொடர்பாக நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. கலெக்டர் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில், அனைத்து துறைகளுடன் இணைந்து சாலைகளில் வாகனங்களில் வியாபாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் அடிக்காசு வசூலிக்க கூடாது. சாலையோரங்களில் வாகனங்களில் வியாபாரம் செய்ய வேண்டாம் என, எச்சரிக்குமாறும் அறிவுறுத்தினார்.

அதன்படி நகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலையோர கடைகளுக்கும் துண்டறிக்கை மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இருப்பினும் சாலைகளில் வாகனங்களில் வியாபாரம் செய்வது தொடர்கிறது. அவற்றை போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து உழவர்கரை நகராட்சி அப்புறப்படுத்தும் பணியை துவக்கியுள்ளது.

இதுவரை 9 வாகனங்கள் பறிதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவை எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்று கோரிமேடு திண்டிவனம் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பங்க் கடையை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

இந்த நடவடிக்கை, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சாலையோரங்களில் வாகனங்கள், பங்க்கள் அமைத்து வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us