sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

370 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி

/

370 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி

370 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி

370 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி


ADDED : ஜூலை 22, 2025 08:06 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 08:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், 370 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 13,900 ரூபாய் அபராதம் விதிக் கப்பட்டது.

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகள் பயன்படுத்தா பகுதியாக அறிவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், ஆணை யர் சுரேஷ்ராஜ் உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர், கடந்த 18ம் தேதி முதல் நேற்று (21ம் தேதி) வரை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு நிலை குறித்து ஆய்வு மேற் கொண்டனர்.

கோரிமேடு பிரதான சாலை மற்றும் வழுதாவூர் பிரதான சாலையில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், 370 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அதனை வினியோகம் மற்றும் பயன்படுத்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு 13,900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இது போன்ற ஆய்வுகள் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us