ADDED : மார் 03, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மதகடிப்பட்டு பகுதியில் நடந்த காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், 'ஆத்மா' திட்டத்தில் நடந்த முகாமிற்கு, வேளாண் அதிகாரி நடராஜன் தலைமை தாங்கி, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். பாலுார், காய்கறி ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த விஜயகீதா, காய்கறி பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள், விதைகள் தேர்வு செய்தல் குறித்தும், மணக்குள விநாயகர் வேளாண் கலலுாரி ரேவதி, காய்கறிப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கினர்.

