ADDED : டிச 17, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிகமாக மது குடித்த காய்கறி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்திகேசவன் 59, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சேதாரப்பட்டில் உள்ள மதுபானக்கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி விழுந்து இறந்தார்.
புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

