ADDED : டிச 27, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப் பள்ளி முன் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சி நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியை சரோஜினி தலைமை தாங்கினார். ஆசிரியை சரோஜா வரவேற்றார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி ஷீலா கலந்து கொண்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில் பள்ளி மாணவர்கள் பழங்கள், காய்கறிகள் கொண்டு உடை அணிந்து காட்சியளித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிவமதி, சதீஷ், பாலகிருஷ்ணன், செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

