ADDED : மார் 18, 2026 04:53 AM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: கடலுார் சாலை தவளக்குப்பம் சோதனை சாவடியில், போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் வரும் 9ம் தேதி, சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, மாநில எல்லை பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, துணை ராணுவம் மற்றும் போலீசார் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
கடலுார் சாலை, தவளக்குப்பம் அடுத்த கொருக்கன்மேடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் கடலுார் மார்க்கமாக செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் மற்றும் ராணுவத்தினர் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். நேற்று அவ்வழியாக சென்ற கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து, பின்னர் அனுப்பினர்.
