ADDED : பிப் 08, 2026 04:07 AM
அ நிறம் | அளவு
பாகூர்: மேக்சி டிரக் வாகனம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த குருவிநத்தம் வாழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 46. இவர், பாகூரில் ஓட்டல் மற்றும் கேட்டரிங் சர்விஸ் நடத்தி வருகிறார்.
இவர் சொந்தமாக, பொலீரோ மேக்சி டிரக் வைத்துக் கொண்டு, கேட்டரிங் டெலிவரிக்கு பயன்படுத்தி வந்தார்.
கடந்த 4ம் தேதி வேலையை முடித்து, ஓட்டல் வாசலில் வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை பார்த்த போது வாகனத்தை காணவில்லை.
இது குறித்து, ஆறுமுகம் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
