/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாகனங்கள் மற்றும் சமுதாய பணியாளர்கள் நாள் விழா
/
வாகனங்கள் மற்றும் சமுதாய பணியாளர்கள் நாள் விழா
ADDED : மார் 04, 2026 04:47 AM

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாகனங்கள் மற்றும் சமுதாயப் பணியாளர்கள் நாள் விழா கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். ஆசிரியை கோமளா வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ரேவதி, முனைவர் அருளரசி நோக்கவுரையாற்றினார். பட்டதாரி ஆசிரியர்கள் சங்கரதேவி, தேவி, வனிதா, திவ்யா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவர்கள் மற்றும் பெற்றோர் உருவாக்கிய பல்வேறு வகையான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
சமுதாயப் பணியாளர்களான மருத்துவர், பொறியாளர், காவலர், காய்கறி விற்பவர் போன்ற வேடங்களில் மாணவர்கள் நடித்துக் காட்டினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வருண் குபேரன், சுகந்தி, அமலா, சிறப்பு ஆசிரியை அகிலாண்டேஸ்வரி, கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் சாமுண்டீஸ்வரி நன்றி கூறினார்.

