ADDED : ஏப் 25, 2026 08:06 PM

வில்லியனுார்: உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு கூடப்பாக்கத்தில் செல்ல பிராணிகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.
இந்திய விலங்குகள் நல வாரியம், புதுச்சேரி பிராணிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கோமாதா கோசாலை ஆகின இணைந்து உலக கால்நடை மருத்துவ தின விழாவை கொண்டாடினர்.
கூடப்பாக்கம் கிராமத்தில் நடந்த மருத்துவ தின நிகழ்ச்சியில் கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு சிறப்பு சிகிச்சை முகம் நடந்தது. விலங்குகள் நல அலுவலர் செல்வமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல் மற்றும் பெங்களூரு மத்திய உரை விந்து தயாரிப்பு மைய அப்துல்சலாம் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார்.
முகாமில் 70க்கும் மேற்பட்ட கால்நடைகள், 10 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளித்தனர். கால்நடை டாக்டர்கள் சங்கீதா, பாலாஜி, சபரி, சங்கரநாதன், சுந்தரிமுத்து, லாவண்யா மற்றும் கிருபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
முகாமில் கலந்து கொண்ட கால்நடை உரிமையாளர்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகள், பருவத்திற்கு வர ஹார்மோன்கள் மற்றும் ஒட்டுண்ணி நீக்குவதற்கான மருந்துகள் இலவசமாக வழங்கினர்.

