sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு ஊழியர்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

/

அரசு ஊழியர்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

அரசு ஊழியர்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

அரசு ஊழியர்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்


ADDED : அக் 03, 2025 01:36 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அரசு அதிகாரிகளை சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், காந்தி ஜெயந்தியையொட்டி, நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள். அந்தந்த கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம் ஆணையர் சதாசிவம் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, குருவிநத்தம் ராஜிவ் காந்தி திருமண மண்டபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அரசு துறை அதிகாரிகளை,தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், மண்டபத்தின் உள்ளே வைத்து, நுழைவு வாயில் கேட்டை பூட்டி, சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், கடந்தகாலங்களில் கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றிய தீர்மானங்கள் மீது நடவடிக்கை இல்லாத பட்சத்தில், மீண்டும் கிராம சபை கூட்டம் ஏன் என, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மண்டபத்தின் உள்ள போலீஸ், உள்ளாட்சி உள்ளிட்ட துறை ஊழியர்கள், பொது மக்கள் சிலரும் சிக்கி கொண்டனர். தகவலறிந்த பாகூர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி அரசு ஊழியர்களையும், பொது மக்களையும் விடுவித்தனர்.

இதேபோல், குடியிருப்புபாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், அதிகாரிகள் யாரும் வராதா நிலையில், கடை நிலை ஊழியர்களை கொணடு ஏன் கூட்டத்தை நடத்துகிறீர்கள் என கேட்டு, பஞ்சாயத்து அலுவலகத்தின் கதவை பூட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து கதவை திறந்தனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us