sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அடையாளம் தெரியாத நபர் அடித்து கொலையா?: போலீசார் விசாரணை

/

அடையாளம் தெரியாத நபர் அடித்து கொலையா?: போலீசார் விசாரணை

அடையாளம் தெரியாத நபர் அடித்து கொலையா?: போலீசார் விசாரணை

அடையாளம் தெரியாத நபர் அடித்து கொலையா?: போலீசார் விசாரணை


ADDED : நவ 26, 2024 06:40 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அடித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்துகிடந்தார்.

தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

இறந்த நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, முகத்தில் ஒரு பக்கம் நசுங்கிய நிலையிலும் மற்றோரு பக்க முகம் வீங்கிய நிலையிலும் இருந்தது.

கிருமாம்பாக்கத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் பிரேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

பின்னர், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுச்சேரி கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இறந்தவர் யார், அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா, வாகனம் மோதிய விபத்தில் அடிபட்டு துாக்கி வீசப்பட்டு இறந்தாரா, அல்லது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்து இறந்தார என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us