UPDATED : ஆக 01, 2026 05:55 PM
ADDED : ஆக 01, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை வயல்வெளி நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ளவிருப்பதால், இரு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணியால் (3ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (4ம் தேதி) ஜெ.ஜெ., நகர், என்.எஸ்.சி., போஸ் நகர், தென்றல் நகர், யோகலட்சுமி நகர், இன்ஜினியர்ஸ் காலனி, சரஸ்வதி நகர், அன்னை தெரேசா நகர், மூலகுளம், உழவர்கரை வயல்வெளி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், சிவகாமி நகர், வள்ளலார் நகர் ஆகிய பகுதிகளில் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
