/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாமியாரை தாக்கிய மருமகனுக்கு வலை
/
மாமியாரை தாக்கிய மருமகனுக்கு வலை
ADDED : பிப் 11, 2025 05:52 AM
அரியாங்குப்பம்: மனைவி, மாமியாரை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தவளக்குப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் அஞ்சலாட்சி, 55; இவர், கடலுார் சாலை இடையார்பாளையம் அருகே தனது மகளுடன், தர்பூசணி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மகள், அதே பகுதியை சேர்ந்த சிலம்புசெல்வம் என்பவரை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சிலம்புசெல்வம் நேற்று முன்தினம் கடைக்கு சென்று, மனைவியிடம் பணம் கேட்டார், அதற்கு பணம் தராததால், ஆத்திரமடைந்த அவர், தனது மனைவியை தாக்கியுள்ளார். அதை தட்டிக்கேட்ட அவரது மாமியாரையும் தாக்கி, அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, அஞ்சாலட்சி கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, சிலம்பு செல்வத்தை தேடிவருகின்றனர்.

